தற்பெருமை வேண்டாமே!

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரலி)அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:''எவனுடைய உள்ளத்தில் அணுஅளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் (சொர்க்கம்)நுழைய முடியாது.''இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: ''மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?'' அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ''(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.'' (முஸ்லிம்)அறிவிப்பாளர்: ஹாரிஸ் பின் வஹ்ப்(ரலி)அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ''பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான். பொய்ப்பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழைய மாட்டான்.'' (அபூதாவூத்)விளக்கம்: நபிமொழி மூலத்தில் 'ஜவ்வாழ்' 'ஜஃழரீ' என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. 'ஜவ்வாழ்' என்னும் சொல்லுக்கு பெருமையடிப்பவன், அகந்தைப் போக்குடையவன், அயோக்கியன்- ஒழுக்கங்கெட்ட தீயவன், செல்வம் சேர்ப்பவன், கஞ்சன் ஆகிய பொருள்களுண்டு. தன்னிடம் எதுவும் இல்லாவிட்டாலும் மக்கள் முன் தன்னிடம் காரூனின் செல்வப் புதையலே இருப்பதாக ஜம்பமடித்துக் கொண்டு திரிபவனை 'ஜஃழரீ' என்பர். வீண் பெருமை பேசித் திரிவது செல்வத்தின் விஷயத்தில் மட்டும் தான் என்பதல்ல. துறவு(உலகாசை கொள்ளாமை) இறையச்சம், கல்வி ஆகிய விஷயங்களிலும் கூட இப்படிப் பொய்ப் பெருமை பேசுவோர் இருக்கின்றார்கள்.

0 Response to "தற்பெருமை வேண்டாமே!"

கருத்துரையிடுக

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text