யாருக்கும் தீமை செய்யாதீர்

அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி)அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: ''அல்லாஹ்வுடைய திருவேதம் வாக்குகளில் மிகத் தூயதாகும். முஹம்மத்(ஸல்) அவர்கள் காட்டிய சீரியவழி ஏனைய வழிகளைக் காட்டிலும் மேலானதாகும்.''(முஸ்லிம்)அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)என்னிடம் அண்ணலார்(ஸல்) கூறினார்கள்: ''என் அன்பு மகனே! உன்னுள்ளத்தில் எவருக்கும் தீமை நாடாமல் உன்னால் வாழ முடியுமென்றால் அவ்விதமே நீ வாழ்!'' பின்னர் கூறினார்கள்: ''இது தான் எனது ஸுன்னத்(வழிமுறை) ஆகும். (என் உள்ளத்தில் எவரைக் குறித்தும் தீய எண்ணம் இல்லை) எவன் எனது ஸுன்னத்தை(வழிமுறையை) நேசிக்கின்றானோ அவன் என்னையே நேசித்தவனாவான். எவன் என்னை நேசித்தானோ அவன் சுவனத்தில் என்னுடன் இருப்பான்.''வள்ளல் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாட்டு முறைகள் எவ்வாறிருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களின் மனைவியரிடம் மூவர் வந்தனர். அவர்களுக்கு அது குறித்து விளக்கம் தரப்பட்டதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் செய்துவரும் (இபாதத்) இறைவழிபாடு மிகக் குறைவாக இருக்கின்றதே என்று நினைத்தனர். பிறகு பெருமானார்(ஸல்) அவர்களோடு நம்மை எப்படி ஒப்பிட முடியும்? அவர்கள் முன்பின் எப்போதும் பாவம் செய்யாதவர்களாயிற்றே! (ஆனால், நாமோ பாவம் செய்யாதோரல்லர்! எனவே, நாம் அதிகமதிகம் இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டும்) என்றெல்லாம் அவர்கள் மனதுக்குள் எண்ணிக் கொண்டனர். அந்த மூவரில் ஒருவர் பின்வருமாறு கூறினார்: ''இனி நான் இரவு நேரங்களில் உறங்கவே மாட்டேன்! இரவு முழுவதையும் நஃபிலான (கடமைக்கும் அதிகப்படியான) வணக்கங்களில் கழிக்கப் போகிறேன்''.இரண்டாமவரோ, ''நான் இனி இடைவிடாது நஃபிலான நோன்புகளை நோற்கப் போகிறேன். பகலில் ஒருபோதும் சாப்பிட மாட்டேன்!'' என்று கூறினார். மூன்றாமவர், ''நான் பெண்களை விட்டும் ஒதுங்கி இருக்கப் போகின்றேன். ஒரு காலமும் நான் திருமணமே செய்ய மாட்டேன்'' எனக் கூறினார். (இந்தச் செய்தி பெருமானார்(ஸல்) அவர்களுக்கு எட்டியதும்) நபியவர்கள் அத்தோழர்களிடம் சென்று ''இவ்வாறெல்லாம் கூறியவர்கள் நீங்கள்தாமா?'' என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து கூறினார்கள்: ''நிச்சயமாக நான் உங்களை விட அதிகமாக அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனாக இருக்கின்றேன். அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்பவனாக இருக்கின்றேன். ஆயினும், பாருங்கள்; நான்(நஃபிலான) நோன்புகளை சிலசமயம் நோற்கின்றேன்! (இரவு நேரங்களில்) நஃபிலான தொழுகைகளையும் தொழுகின்றேன். தூங்கவும் செய்கின்றேன். இன்னும் பாருங்கள்! நான் பெண்களை மணம் முடித்தும் இருக்கின்றேன். (எனவே, எனது வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் தான் உங்களுக்கு நன்மையுண்டு) மேலும், எவருடைய கண்ணோட்டத்தில் என் ஸுன்னத்(வழிமுறை) பற்றிய கண்ணியம் இல்லையோ, எவர் எனது ஸுன்னத்(வழிமுறையை) அலட்சியப்படுத்துகின்றாரோ அவருக்கும் எனக்கும் எத்தகையத் தொடர்புமில்லை.''(முஸ்லிம்)அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்வதிலிருந்து மக்களைத் தடுத்து விட்டிருந்தார்கள். பின்னர் அச்செயலைச் செய்திட இனி தாம் அனுமதியளிப்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அச்செயலை அண்ணலார் தாமே செய்தார்கள். அவ்வாறிருந்தும் சிலர் அந்தச் செயலைச் செய்திட முன் வரவில்லை. அம் மக்களின் இந்த மனப்பான்மை அண்ணலாருக்குத் தெரிய வந்தவுடன், அண்ணலார் உரையாற்றினார்கள். இறைவனைப் புகழ்ந்த பின் கூறினார்கள்:''நான் செய்கின்ற ஒரு செயலைச் செய்யாமல் சிலர் ஏன் விலகிக் கொள்கிறார்கள்? இறைவன் மீதும் ஆணையாக, நான் அவர்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கின்றேன். அவர்கள் அனைவரையும்விட அதிகமாக அவனுக்கு அஞ்சக்கூடியவனாகவும் இருக்கின்றேன்.'' (புகாரி முஸ்லிம்) (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)



மனைவி பாராட்டும் கணவன்

Madinah - Adana Mosque
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிரா எனும் மலைக் குகையில் இறை தியானத்தில் மூழ்கியிருந்தார்கள். அச்சமயத்தில்தான் இறைவன் அண்ணலாரைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அதைத் தொடர்ந்து வானவர் தலைவர் ஜிப்ரீல் அவர் முன் தோன்றி இறைவனின் திருச்செய்தியை அருளினார். அச்சத்தால் உடல் நடுங்க, வேர்த்து விறுவிறுத்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வீடு திரும்பினார்கள். வீட்டிற்கு வந்ததும் அன்பு மனைவி கதீஜாவை அழைத்து நடந்ததையெல்லாம் கூறி, ‘‘என்னைப் போர்வையால் போர்த்துங்கள்; போர்வையால் போர்த்துங்கள்’’ என்றார்.
அப்பொழுது கதீஜா அவர்கள் தம் அன்புக் கணவருக்குக் கூறிய ஆறுதல் மொழிகள் இன்றும் வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. அன்னை கதீஜா கூறினார்:
‘‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இறைவன் உங்களை ஒருபோதும் சிறுமைப்படுத்த மாட்டான். நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்ததில்லை. நீங்கள் நன்மையான செயல்களைச் செய்கிறீர்கள். தான, தர்மங்களை வழங்குகிறீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறீர்கள். அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்கிறீர்கள். உறவுகளைப் பேணி நடக்கிறீர்கள். துன்பமுற்றோருக்கு உதவி புரிகின்றீர்கள். இப்படியிருக்க, நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? தைரியமாக இருங்கள். இறைவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்.’’
அதன்பிறகு அண்ணலார் அச்சம் நீங்கி இறைவனின் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். அன்னை கதீஜாவின் அழகிய நடைமுறை நமக்குப் பல படிப்பினைகளைத் தருகிறது. கணவருக்குத் துன்பம் ஏற்படும்போது ஒரு மனைவி எப்படிச் செயல்பட வேண்டும் என்பது முதல் பாடம். வெறுமனே ஆறுதல் வார்த்தைகள் கூறாமல், நல்ல கைதேர்ந்த ஒரு மனநல மருத்துவரைப் போல கணவனின் நற்பண்புகளையும் நற்செயல்களையும் எடுத்துக் கூறி, அவருக்கு ஆறுதல் அளிக்கிறார்.
பிரச்னைகளை மனைவியிடம் சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்பது இரண்டாவது பாடம். இன்றைய கணவரும், மனைவியும் பெரிதும் கவனத்தில் கொள்ள
வேண்டிய செய்தியாகும் இது. எல்லாவற்றையும் விட முக்கியமான பாடம், மனைவி மனம் திறந்து பாராட்டும் அளவுக்குக் கணவனிடம் நல்ல பண்புகளும் நற்செயல்களும் மேலோங்கி இருக்க வேண்டும். சும்மா கிடைத்துவிடுமா மனைவியின் பாராட்டு? அதற்காக நாமும் ஏன் முயற்சி செய்யக் கூடாது?
இந்த வாரப் பிரார்த்தனை
‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரையும் எங்கள்
குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக. மேலும் எங்களை இறை அச்சமுடையவர்களுக்குத் தலைவர்களாய்த் திகழச் செய்வாயாக!’
(திருக்குர்ஆன் 25:74)

இஸ்லாம் கூறும் முதன்மையான(வைகள்)வர்கள்


இந்த உலகில் வாழும் மனிதன் மறுமை நாளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க்கமே இஸ்லாம்.

இந்த இஸ்லாமிய மார்க்கம் சில விஷயங்களை பற்றிக் குறிப்பிடும் போது இவைகள் முதன்மையானவைகள் என்று குறிப்பிடுகிறது.அந்த முதன்மைகளைப் பற்றிக் குறிப்பிடுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

மனிதர்களின் தலைவர்.

''மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4575

முதல் வஹீ.

நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பாக வந்த(வஹீயான)து உண்மைக் கனவுகளே ஆகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4956

இஸ்லாத்தை முதன் முதல் வெளிப்படுத்தியவர்கள்.

முதன் முதல் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவர்கள் ஏழு நபர்களாவர். 1. நபி (ஸல்) அவர்கள் 2.அபூபக்ர் (ரலி) 3.அம்மார் (ரலி) 4. சுமைய்யா (ரலி) 5. ஸுஹைப் (ரலி) 6. பிலால் (ரலி) 7. மிக்தாம் (ரலி)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: இப்னு மாஜா 147

(அன்னை கதீஜா (ரலி) அவர்களும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதற்கு வேறு செய்திகளில் ஆதாரம் இருக்கிறது.) மேலும் படிக்க...

சத்தியம் செய்ய வேண்டாம்

http://www.fileguru.com/images/b/islamicsaver-makkah_screensaver_desktop_screen_savers-26679.jpeg அறிவிப்பாளர்: ரிஃபாஆ (ரலி) பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''தம்முடைய வாணிபத்தில் இறையச்சத்துடன் (இறைக்கட்டளைகளை மீறாமல்) நடந்து கொண்டவர்கள், நன்மையை மேற்கொண்டவர்கள் (மக்களின் உரிமைகளை முழுமையாகத் தந்தவர்கள்) வாய்மையைக் கடைப்பிடித்தவர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர மற்றெல்லா வணிகர்களும் மறுமை நாளில் தீயொழுக்கமுடையோராகவே எழுப்பப் படுவார்கள்.''(திர்மிதி)அறிவிப்பாளர்: அபூகதாதா(ரலி)பெருமானார்(ஸல்) அவர்கள் (வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்:'உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.''(முஸ்லிம்)விளக்கம்: வியாபாரி ஒரு பொருளைக் குறித்து இதுதான் அதற்குரிய விலை; இப்பொருள் தரமிக்கது; நயமானது என்று சத்தியமிட்டு உத்தரவாதமளித்தால், அப்போதைக்கு வேண்டுமானால் அவருடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் அப்பொருளை வாங்கிவிடக் கூடும். ஆனால், உண்மை வெளிப்படும்போது எவருமே அவருடைய கடையின் பக்கமே திரும்பியே பார்க்க மாட்டார்கள். பிறகு அவருடைய வியாபாரம் மந்தமாகி இறுதியில் சீரழிந்து போகும். எனவே தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text