இந்த உலகில் வாழும் மனிதன் மறுமை நாளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க்கமே இஸ்லாம்.
இந்த இஸ்லாமிய மார்க்கம் சில விஷயங்களை பற்றிக் குறிப்பிடும் போது இவைகள் முதன்மையானவைகள் என்று குறிப்பிடுகிறது.அந்த முதன்மைகளைப் பற்றிக் குறிப்பிடுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மனிதர்களின் தலைவர்.
''மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4575
முதல் வஹீ.
நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பாக வந்த(வஹீயான)து உண்மைக் கனவுகளே ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4956
இஸ்லாத்தை முதன் முதல் வெளிப்படுத்தியவர்கள்.
முதன் முதல் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவர்கள் ஏழு நபர்களாவர். 1. நபி (ஸல்) அவர்கள் 2.அபூபக்ர் (ரலி) 3.அம்மார் (ரலி) 4. சுமைய்யா (ரலி) 5. ஸுஹைப் (ரலி) 6. பிலால் (ரலி) 7. மிக்தாம் (ரலி)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: இப்னு மாஜா 147
(அன்னை கதீஜா (ரலி) அவர்களும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதற்கு வேறு செய்திகளில் ஆதாரம் இருக்கிறது.) மேலும் படிக்க...
0 Response to "இஸ்லாம் கூறும் முதன்மையான(வைகள்)வர்கள்"
கருத்துரையிடுக