நல்ல விஷயங்களை கற்றுக் கொடுங்கள்


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் "குத்பா' உரையாற்றினார்கள். அதில் சில முஸ்லிம்களைப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்:
""சிலர் தம் அண்டை வீட்டாருக்கு மார்க்க அறிவைக் கற்பிப்பதில்லை. அவர்களுக்கு மார்க்க போதனையும் புரிவதில்லை. மார்க்கத்தை அறியாதிருப்பதால் விளையும் தீய விளைவுகளை எடுத்துச் சொல்வதுமில்லை; அவர்களைத் தீய செயல்களை விட்டுத் தடுப்பதுமில்லை. ஏன் இந்த நிலை?
சிலர் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதில்லை; மார்க்க அறிவை நம்முள் உண்டாக்கிக் கொள்வதுமில்லை; மார்க்கத்தை அறியாதிருப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளை அறிந்து கொள்வதுமில்லை. ஏன் இந்த நிலை?
இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் மார்க்கத்தைப் போதிக்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டும். நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டும். தீயவற்றிலிருந்து தடுக்க வேண்டும். மேலும் மக்கள் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்க வேண்டும். அவர் களுடைய அறிவுரைகளை ஏற்க வேண்டும். இல்லையென் றால் நான் அவர்களுக்கு வெகு விரைவில் தண்டனை அளிப்பேன்.''
இந்த உரையின் செய்தி அஷ்அரீ குலத்தாருக்கு எட்டியவுடன் அவர்கள் அண்ணலாரிடம் வந்தனர். ""அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தங்கள் உரையில் சிலரைப் புகழ்ந்தீர்கள். எங்கள் மீது கோபப்பட்டீர்கள். நாங்கள் என்ன தவறிழைத்தோம்?'' என்று கேட்டார்கள். அண்ணலார் கூறினார்கள்: ""மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் மார்க்க அறிவைப் புகட்ட வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நற்செயல்கள் புரியும் படி அவர்களை ஏவுதல் வேண்டும். தீய விஷயங்களை விட்டுத் தடுக்க வேண்டும். இவ்வாறே மக்கள் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்க வேண்டும். அவர்களுடைய அறிவுரையை ஏற்க வேண்டும். நமக்குள் மார்க்க அறிவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நான் அவர்களுக்கு வெகு விரைவில் இவ்வுலகிலேயே தண்டனை அளிப்பேன்.''
அதற்கு அஷ்அரீ குலத்தார் கூறினார்கள்: ""அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பிறருக் குள்ளும் மார்க்க அறிவை உண்டாக்க வேண்டுமா?'' (அறிவுரை புரிவதும், அழைப்புப் பணி செய்வதும் எங்கள் கடமையா?) என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், ""ஆம்; இதுவும் உங்கள் பொறுப்பேயாகும்,'' என்று நவின்றார்கள். உடனே, அம்மக்கள் ""எங்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். ஒராண்டுக்குள் அவர்கள் தம் அண்டைச் சமுதாயத்தவருக்கு மார்க்க அறிவை உண்டாக்கிட வேண்டும். மார்க்க சட்டங்களைப் போதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் ஓராண்டுக்கால அவகாசத்தை அவர்களுக்கு அண்ணலார் அளித்தார்கள். இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லஇன்னல்லஸீன கஃபரூமின் பனீஇஸ்ராயீல'' என்று தொடங்கும் இறைவசனத்தை ஓதினார்கள்.
ஐந்தாவது அத்தியாயமான அல்மாயிதாவிலுள்ள அந்த வசனத்தின் பொருளாவது: ""இஸணராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மரியத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும் இறை வரம்புகளை மீறிய வண்ணம் இருந்தார்கள். தாம் செய்து கொண்டிருந்த தீய செயலில் இருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன.''(5:78) (தப்ரானீ)
-அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து

0 Response to "நல்ல விஷயங்களை கற்றுக் கொடுங்கள்"

கருத்துரையிடுக

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text